தற்கொலை செய்யப் போவதாக ஆட்சியரிடம் பழ வியாபாரி மிரட்டல்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்த்த சாலையோர பழ வியாபாரி சந்தியாகு கடந்த 7 ஆம் தேதி மதுரைக்கு பழங்கள் கொள்முதல் செய்ய வந்து உள்ளார்.
தற்கொலை செய்யப் போவதாக ஆட்சியரிடம் பழ வியாபாரி மிரட்டல்
Published on

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்த்த சாலையோர பழ வியாபாரி சந்தியாகு கடந்த 7 ஆம் தேதி மதுரைக்கு பழங்கள் கொள்முதல் செய்ய வந்து உள்ளார். அப்போது பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் சந்தியாகுவிடம் இருந்து 77 ஆயிரத்து 100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்கள் ஒப்படைத்தும் பணத்தை திருப்பி வழங்காமல் பறக்கும் படை அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை ஆட்சியரிடம் கண்ணீர் மல்க தனது புகாரை தெரிவித்த சந்தியாகு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com