Sivaganga | சிவகங்கை அருகே களத்தில் இறங்கிய 3000 பேர் - சல்லடை போட்டு சளிக்கப்பட்ட கண்மாய்
Sivaganga | சிவகங்கை அருகே களத்தில் இறங்கிய 3000 பேர் - சல்லடை போட்டு சளிக்கப்பட்ட கண்மாய்
திருப்பத்தூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் ஒரே நேரத்தில் 3,000 மேற்பட்டோர் கண்மாயில் குதித்த மீன்களை பிடித்தனர்.. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெடுமரம் கிராமத்தில், தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பிரம்மாண்ட பாரம்பரிய மீன்பிடி திருவிழா மிக உற்சாகமாக நடைபெற்றது. இதில் நெடுமரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கினர். இந்த மீன்பிடித் திருவிழாவில் நாட்டு வகை மீன்களான கட்லா, ஜிலேபி, கெண்டை, விரால் என ஏராளமான மீன்கள் மக்களுக்குக் கிடைத்தன. எதிர்பார்த்ததை விடப் பெரிய அளவிலான மீன்கள் கையில் சிக்கியதால், மீன்பிடி ஆர்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். தங்களுக்குக் கிடைத்த மீன்களைத் தங்களது பைகளிலும், கூடைகளிலும் அள்ளிக்கொண்டு மக்கள் உற்சாகத்துடன் இல்லம் திரும்பினர்.
