மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டி-இந்தியா சார்பாக பதக்கம் வென்ற ராமநாதபுரம் மாணவர்கள்

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டி-இந்தியா சார்பாக பதக்கம் வென்ற ராமநாதபுரம் மாணவர்கள்
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டி-இந்தியா சார்பாக பதக்கம் வென்ற ராமநாதபுரம் மாணவர்கள்
Published on

மலேசியாவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் பதக்கம் வென்ற ஊர் திரும்பிய ராமநாதபுரம் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 14 ,15 ஆகிய தேதிகளில் சர்வதேச சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 8 ஆசிய நாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பாக போட்டியிட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றனர். சொந்த ஊர் திரும்பிய அவர்களுக்கு ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com