சித்த மருத்துவத்திற்கு குறைந்த நிதி ஏன் ? - மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதா? என்று மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதா? என்று மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சித்த மருத்துவ துறைக்கு 437 கோடி ரூபாய் மட்டும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஆயுஷ் என்ற பெயரில் இருந்து சித்தாவை குறிப்பிடும் 'எஸ்' ஐ நீக்கி விடலாமே என்று தெரிவித்த நீதிபதிகள், குறைந்த நிதி ஒதுக்கீடு செய்தது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com