Shivalingam | 5 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பிய சிவலிங்கம்-அபிஷேக திருநீறு இட்டு வழிபட்ட பக்தர்கள்
Shivalingam | 5 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பிய சிவலிங்கம்-அபிஷேக திருநீறு இட்டு வழிபட்ட பக்தர்கள்
5 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பிய சிவலிங்கம் - அபிஷேக திருநீறு இட்டு வழிபட்ட பக்தர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே வருவாய்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த தட்சணாமூர்த்தீஸ்வரர் சிவலிங்கம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், சிவலிங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், சிவலிங்கம் மீண்டும் ஊர் திரும்பியதை மகிழ்ச்சியுடன் வரவேற்ற பக்தர்கள், கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பெண்கள் அபிஷேக திருநீறை நெற்றியில் இட்டு தரிசனம் செய்தனர்
