பழமையான காவலர் குடியிருப்புகள் சீரமைக்கப்படும் - சீமா அகர்வால், ஏ.டிஜி.பி

பழமையான காவலர் குடியிருப்புகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக காவல்துறை தலைமையிட ஏடிஜிபி சீமா அகர்வால் கூறினார்.

பழமையான காவலர் குடியிருப்புகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக காவல்துறை தலைமையிட ஏடிஜிபி சீமா அகர்வால் கூறினார். சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு மற்றும் யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், காவலர் குடியிருப்புகள் மற்றும் காவல் நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். மோசமான நிலையில் உள்ள குடியிருப்புகளை இடித்துவிட்டு மீண்டும் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீமா அகர்வால் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com