மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கடல்பசு : பத்திரமாக மீட்டு கடலில் விட்ட மீனவர்கள்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டது.
மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கடல்பசு : பத்திரமாக மீட்டு கடலில் விட்ட மீனவர்கள்
Published on
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு பத்திரமாக மீட்கப்பட்டு, மீண்டும் கடலில் விடப்பட்டது. வலையில் எடை அதிகமாக ஏதோ சிக்கியதை அறிந்த மீனவர்கள், மகிழ்ச்சியோடு அவசரமாக கரைக்கு கொண்டுவந்தனர். பின்னர் தான் அது மிகவும் ஆபூர்வ உயிரினமான கடல் பசு என்பதை அறிந்துள்ளனர். வலையில் இருந்து அதனை பத்திரமாக மீட்ட மீனவர்கள், மீண்டும் கடலுக்குள் விட்டனர். இதற்காக வனத்துறை மற்றும் இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com