எஸ்.சி.., எஸ்டி. இட ஒதுக்கீடு.. திருமாவளவன் முதல்வருக்கு வைத்த முக்கிய கோரிக்கை..! | MK Stalin

எஸ்.சி., எஸ்.டி., பணியாளர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் வரை நாம் அனைவரும் உறுதியாக நின்று போராடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில், எஸ்சி எஸ்டி பணியாளர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்றக் கோரி தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், உயர் பதவிகளில் இட ஒதுக்கீடு இல்லை என்று கூறினார். உயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கொள்கையை நீர்த்துப்போக செய்கின்ற செயல் என்றும் குற்றம்சாட்டினார்

X

Thanthi TV
www.thanthitv.com