

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நேற்றைய முந்தைய தினம் பவுர்ணமியை முன்னிட்டு 6 மணி நேரமும், நேற்று 3 மணி நேரமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒன்பது மணி நேரத்தில் சுமார் இரண்டாயிரத்து 100 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.