சர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார். திருச்சியில் உடைந்த முக்கொம்பு, கொள்ளிடம் ஆற்றின் மேலணையை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.