

மேட்டூர் அணையின் உபரி நீரை100 வறண்ட ஏரிகளுக்கு திருப்பி விடுவதற்காக சரபங்கா நீரேற்று திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
* இதற்காக, 565 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்ட நிலையில், விதிமீறல் உள்ளதாக கூறி சேலத்தை சேர்ந்த அருள் நம்பி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
* வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாசனத் திட்ட வல்லுனர்கள் மூலம் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், அதிக தொகைக்கான டெண்டர்களை எதிர்த்து தொடரும் வழக்குகளை ஏற்றால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விடும் எனவும் தெரிவித்தது.
* மேலும், விதிமீறல்கள் இல்லாத நிலையில், பொதுநல மனு நடைமுறையை தவறாக பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி, வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.