Saneeswaran Temple| சனீஸ்வரன் கோயிலுக்கு படையெடுக்கும் மக்கள் - நேரம் ஆக ஆக அதிகரிக்கும் கூட்டம்
ஆடி மாதம் 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு, காரைக்கால் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழகத்தின் திருச்சி, தஞ்சாவூர், சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர். முன்னதாக நளதீர்த்த குளத்தில் புனித நீராடி, கலிதீர்த்த விநாயகரை வழிபட்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், காவல் கண்காணிப்பாளர் பழனிவேல், ஆய்வாளர் பிரவீன் குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
