மணல் அள்ளுதல் குறித்து சர்ச்சை பேச்சு : செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு

கரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மணல் அள்ளுதல் குறித்து சர்ச்சை பேச்சு : செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு
Published on
கரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சில தினங்களுக்கு முன், தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய செந்தில் பாலாஜி, தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் மாட்டு வண்டி உரிமையாளர்கள், ஆற்று மணல் அள்ளலாம் என்றும், அதை தடுக்கும் அரசு அதிகாரிகள் பதவியில் இருக்க முடியாது என்றும் பேசியதாக சர்ச்சை எழுந்த‌து. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் நகர காவல்நிலையத்தில் செந்தில் பாலாஜி மீது, வன்முறையை தூண்டுதல், பொதுப் பணியாளர்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com