Salem | School | ஸ்கூல் HM ரூம் வாசலில் நள்ளிரவில் மாந்திரீக பூஜை - கதி கலங்க வைக்கும் பகீர் காட்சி

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் அறை வாசலில் மாந்திரீக பூஜை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அரசுப்பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியர் அறை வாசலில் மாந்திரீக பூஜை செய்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கமாண்டப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் நள்ளிரவில் மர்மநபர்கள் புகுந்துள்ளனர். அவர்கள் தலைமை ஆசிரியரின் அறை வாசலில் முட்டை, மஞ்சள், குங்குமம், மாந்திரீக பொம்மை ஆகியவற்றை வைத்து பூஜை செய்துவிட்டு சென்றுள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com