சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 92 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சார்பதிவாளர் தனசேகரன் மற்றும் அலுவலக பணியாளர்கள், பத்திர எழுத்தர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர்.