

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள சேர்வராயன் மலை பகுதிகளில் வளர்ந்து நிற்கும் மூங்கில்களை சிலர் வெட்டி கடத்தி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். காய்ந்த மூங்கில்களை வெட்ட ஏலம் எடுத்தவர்கள், பச்சை மூங்கில்களையும் சேர்த்து வெட்டி எடுத்து செல்கின்றனர் எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் பச்சை மூங்கிலை வெட்டுவதை தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.