சேலம் மருத்துவமனை தீ விபத்து..ஈபிஎஸ் பரபரப்பு கருத்து

x

சேலம் அரசு மருத்துவமனை தீ விபத்து தொடர்பாக முழு விசாரணை நடத்தி உண்மையை நிலையை விளக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், விபத்தில் ஒரு நோயாளி உயிரிழந்ததை அறிந்து மிகவும் வருத்தமுற்றதாகவும் குறிப்பிடுள்ளார். இறப்பு குறித்து முழு விசாரணை நடத்தி உண்மை நிலையை விளக்க வேண்டியது அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வந்து செல்லும் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் உடனடியாக ஆய்வு செய்து சீர்செய்ய வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்