"கடையில் எதுவும் வாங்கவில்லையா!" - ஒற்றை கேள்வியால் ஆண்,பெண் பாராமல் கொடூரமாக தாக்கிய கும்பல்

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, தகராறின் போது வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல், பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாரமங்கலம் அருகே கருக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் பணிபுரியும் துணிக் கடைக்கு வந்த கும்பல் ஒன்று, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடையில் இருந்து விட்டு துணி எதுவும் எடுக்காமல் சென்றுள்ளது. நீண்ட நேரம் இருந்துவிட்டு துணி எடுக்காமல் சென்றது குறித்து ஊழியர் தினேஷ் கேட்டபோது, அவரை அந்தக் கும்பல் தாக்கியுள்ளது. அப்போது அதனை தட்டிக்கேட்ட அதே பகுதியை சேர்ந்த பெண்களையும் தாக்கியது மட்டுமல்லாமல், அங்கிருந்த வாகனங்களையும் அந்தக் கும்பல் அடித்து நொறுக்கியது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதுதொடர்பான புகாரின் பேரில் 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்