தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள், சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் முழக்கம் எழுப்பினர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக அரசு உறுதி அளித்திருந்தாலும், அது தொடர்பான அரசாணை வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.