பாலியல் வன்கொடுமை...அதிர்ச்சியில் ஆழ்த்திய ரிப்போர்ட்

x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 26 மாதங்களில் 221 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது மூலம் அங்கு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகின்றனர். குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை குறையவில்லை என்றும்,

10 சதவீத பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மட்டுமே வெளி உலகத்திற்கு தெரிய வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவற்றை தடுக்க பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்