"விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் நிவாரணம்.. முதல்வரின் உத்தரவு" - அமைச்சர் சொன்ன தகவல்

மழை வெள்ள பாதிப்பில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய அவர், வெள்ள பாதிப்பில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களையும் சேர்த்து, விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com