46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர்

46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர்

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 ஆசிரியர்கள் உள்பட நாடு முழுவதும் 46 பேருக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
Published on
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 ஆசிரியர்கள் உள்பட நாடு முழுவதும் 46 பேருக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். தமிழகத்தில், கோபிச்செட்டிப்பாளையம் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மன்சூர் அலி, கரூர் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ கண்ணன் மற்றும் புதுச்சேரி கூனிச்சம்பட்டு அரசுப்பள்ளி ஆசிரியர் சசிகுமார் ஆகிய 3 பேர் தேசிய விருது பெற்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com