Rameswaram | அக்னி தீர்த்த கடலில் புனித நீராடல் - ராமேஸ்வரத்தில் அலைமோதும் பக்தர்கள்..
Rameswaram | அக்னி தீர்த்த கடலில் புனித நீராடல் - ராமேஸ்வரத்தில் அலைமோதும் பக்தர்கள்.. குவிக்கப்பட்ட போலீஸ் கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு திதி கொடுத்து வருகின்றனர். மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி எந்த ஒரு குற்றச்செயல்களும் நடைபெறாமல் இருப்பதற்காக நான்கு ரத வீதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
