மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள நிலையில், வெளி மாநில படகுகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி அமலில் இருந்து வருகிறது. இதனால் கிழக்கு கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநில மீனவர்கள் தடையை மீறி மீன்பிடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுத்த நிறுத்த மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.