ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் வடமாநில பக்தர்களை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். முதியவர் ஒருவர் 10 ரூபாய் நோட்டை கீழே போட்டு விட்டு, ஒரு பெண்ணிடம் இது உங்கள் பணமா என கேட்க, அருகில் இருந்த இளைஞர் அந்த பெண்ணின் பையில் இருந்த பணத்தை எடுத்து செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் திருடர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.