Ramanathapuram | Protest | "வீட்ட இடிச்சுட்டாங்க.. நிக்க கூட இடம் இல்ல.." | கதறும் மக்கள்
நான்கு வழி சாலை - நில இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க கோரி போராட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பொட்டிதட்டி ஊராட்சியில் நான்கு வழிச்சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், இழப்பீடுத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரியும், வீடுகளை காலி செய்ய மிரட்டல் விடுவதாகவும் கூறி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பரமக்குடி - ராமநாதபுரம் இடையிலான சாலை விரிவாக்கப் பணியில், நிலம் கொடுத்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குறைவான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, இழப்பீடு தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், தனியார் ஒப்பந்ததாரர்கள் மின்சாரத்தைத் துண்டித்தும், வீடுகளைக் காலி செய்யச் சொல்லி மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
