

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் நடுக்கடலில் மாயமான மீனவரின் உடல் 30 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தீவில் சடலடாக மீட்கப்பட்டது. கடல் சீற்றம் மற்றும் காற்று காரணமாக நாட்டுப் படகில் இருந்த மீனவர் ரோஸ்டன் கடலில் விழுந்து மாயமானார்.இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்திய கடலோர காவல்படையின் ஹோவர் கிராப்ட் கப்பல், ஹெலிகாப்டர் மற்றும் மரைன் போலீசார் தேடும் பணியை துரிதப்படுத்தினர். அப்போது மன்னார் வளைகுடா தீவுப்பகுதியில் ஆலாத்தி காடுகளுக்கு ஆலாத்தி காடுகளுக்கு இடையே ரோஸ்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து பாம்பன் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட ரோஸ்டனின் உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.