வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எந்த சேவைக்கும் கட்டணமோ, அபராதமோ விதிக்கக் கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத வாடிக்கையாளர் களின் வங்கிக் கணக்கில் இருந்து, அபராதம் பிடித்தம் செய்வது என்பது, அவர்களின் சேமிக்கும் பழக்கத்தை அடியோடு ஒழித்து விடும் என்று, அறிக்கையொன்றில் டாக்டர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார்