தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பயனாளிகளுக்கு சம்பளத்துடன் தொழிற்பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான செலவு அதிகமாகும் என்றும் அதை ஈடு செய்யும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.