வரும் 19 ஆம் தேதி வரை பா.ரஞ்சித்தை கைது செய்ய தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தை வருகிற 19-ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.
வரும் 19 ஆம் தேதி வரை பா.ரஞ்சித்தை கைது செய்ய தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Published on
ராஜராஜசோழன் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தை வருகிற 19-ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. முன் ஜாமீன் கோரி இயக்குநர் பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனு மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இயக்குநர் பா.ரஞ்சித்தை வரும் 19 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்த்தரவிட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com