சொன்னது போலவே தமிழ்நாட்டுக்கு வந்தது மழை.. ஓட ஓட விரட்டப்பட்ட வெயில்.. மக்கள் மகிழ்ச்சி

x

கோடை வெயிலின் கடும் தாக்கத்திற்கு இடையே, பல்வேறு பகுதிகளில் பெய்த கோடை மழை, பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தா.பழூர், உடையார்பாளையம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரைச் சாலை, மட்டக்கடை பகுதி, பிரையன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை பெய்தது.

இதே போன்று, திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், சன்னாநல்லூர், ஆண்டி பந்தல், மாப்பிள்ளைக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரம், பாம்பன், அக்காள் மடம், புதுரோடு, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த மழையானது பெய்தது. கடும் வெயிலுக்கு நடுவே பெய்த இந்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்