பேருந்து நிலையத்தில் டிக் டாக் வீடியோ : இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் டிக் டாக் இளைஞர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பேருந்து நிலையத்தில் டிக் டாக் வீடியோ : இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Published on
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் டிக் டாக் இளைஞர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பரபரப்பான பேருந்து நிலையத்திற்குள் திடீரென தோன்றும் இளைஞர் ஆடிப்பாடி டிக் டாக் வீடியோ எடுத்து வருகிறார். இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். டிக் டாக் இளைஞரின் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அவர் யார் என்பது கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com