புதுக்கோட்டை : பழமையான ஓலைச்சுவடிகளை அரசிடம் ஒப்படைத்த விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பவர், தமது வீட்டில் பாதுகாத்து வந்த பழமையான ஓலைச்சுவடிகளை, அரசிடம் ஒப்படைத்தார்.
புதுக்கோட்டை : பழமையான ஓலைச்சுவடிகளை அரசிடம் ஒப்படைத்த விவசாயி
Published on

பழனிச்சாமியின் முன்னோர்கள் பாதுகாத்து வந்த நிலையில், கஜா புயலினால் அவரது வீடு சேதடைந்தது. ஓலைச்சுவடிகளை பாதுகாக்கும் பொருட்டு அரசிடம் ஒப்படைக்க பழனிச்சாமி விருப்பம் தெரிவித்த நிலையில், அதனை அறந்தாங்கி வட்டாட்சியர் சூரியபிரபு நேரில் பெற்றுகொண்டார். இதனிடையே, பழமையான ஓலைச்சுவடிகள் தங்கள் கிராமத்தில் இருப்பதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com