புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. களக்குடி கிராமத்தை சேர்ந்த 60 வயதான சோமையா என்ற விவசாயி மதிய வேளையில் ஓட்டு போடுவதற்காக வந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.