புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூரில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளைகள் சீறிபாய்ந்து மைதானத்தை சுற்றி வந்தபோது அவற்றை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில் வீரர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும், மாட்டை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.