Pudukkottai Incident | கொதிக்க கொதிக்க டீயை ஊற்றிய போதை ஆசாமி | தெறித்து ஓடிய கஸ்டமர்ஸ்

கொதிக்க கொதிக்க டீயை ஊற்றிய போதை ஆசாமி | தெறித்து ஓடிய கஸ்டமர்ஸ்

Pudukkottai Incident | கொதிக்க கொதிக்க டீயை ஊற்றிய போதை ஆசாமி | தெறித்து ஓடிய கஸ்டமர்ஸ் | டீக்கடைக்குள் புகுந்து அட்ராசிட்டி | வாடிக்கையாளர்கள் மீது கொதிக்கும் டீ-யை ஊற்றிய போதை ஆசாமி டீக்கடைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி மீது போலீசில் புகார் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே டீக்டைக்குள் புகுந்த போதை ஆசாமி கொதிக்கும் டீயை கடைக்குள் நின்றவர்கள் மீது ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது... அறந்தாங்கி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்டுமாவடி கடைவீதியில் பேக்கரியுடன் கூடிய டீக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் டீக்கடைக்குள் புகுந்த அதே பகுதியை சேர்ந்த ஆரிப்கான் என்ற போதை ஆசாமி, சட்டியில் கொதித்துக் கொண்டிருந்த டீ-யை கடைக்குள் நின்றவர்கள் மீது எடுத்து ஊற்றியதால் வாடிக்கையாளர்கள் செய்வதரியாது ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் மணமேல்குடி காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்துள்ள நிலையில் விசாரித்து வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com