மின் கட்டண வசூல் மையங்கள் மூடல் - மின் கட்டணத்தை செலுத்த முடியாத மக்கள்..

புதுச்சேரியில் உள்ள மின் நுகர்வோர்கள் இன்று முதல் அந்தந்த மையங்களில் மின் கட்டணத்தை செலுத்தலாம் என மின் துறை அறிவித்திருந்தது.
மின் கட்டண வசூல் மையங்கள் மூடல் - மின் கட்டணத்தை செலுத்த முடியாத மக்கள்..
Published on

புதுச்சேரியில் உள்ள மின் நுகர்வோர்கள் இன்று முதல் அந்தந்த மையங்களில் மின் கட்டணத்தை செலுத்தலாம் என மின் துறை அறிவித்திருந்தது. அதனடிப்படையில் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த வந்தனர். ஆனால் மின் கட்டண வசூல் மையங்கள் திறப்பு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அலுவலக வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததால், பொதுமக்கள் திரும்பி சென்றனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள மின்வாரிய அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்த பின்பே, வசூல் மையங்கள் திறக்கப்படும் என தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com