Chidambaram | Bus | பேருந்துகள் இல்லாமல் இரவில் தவித்த மக்கள்.. சிதம்பரத்தில் பரபரப்பு
சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு போதிய பேருந்துகள் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். இதனால் சிதம்பரம் பேருந்து நிலையம் முழுவதும் கூட்டம் அலை மோதியது. முன்பதிவு செய்த பேருந்துகூட சரியான நேரத்திற்கு வரவில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டினர். பேருந்தில் இடம் பிடிப்பதற்காக சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் பயணிகள் காத்திருந்தனர். பண்டிகை காலங்களில் இன்னும் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
