Protest | போராட்டக்காரர்கள் செய்த செயலால் பரபரப்பு - வாகனத்தை தள்ளிக்கொண்டே சென்ற போலீஸ்
போராட்டக்காரர்கள் செய்த செயலால் பரபரப்பு - வாகனத்தை தள்ளிக்கொண்டே சென்ற போலீஸ்
Protest | போராட்டக்காரர்கள் செய்த செயலால் பரபரப்பு - வாகனத்தை தள்ளிக்கொண்டே சென்ற போலீஸ் #police #protest #viralvideo #thanthitv திருச்சி சமயபுரம் அருகே கள்ளு இறக்கியதாக பனையேறிகள் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, பனையேறிகள் சங்கத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 69 பேரை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்திற்குக் கொண்டு சென்றனர். அப்போது, கைதானவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாவியைப் போராட்டக்காரர்கள் எடுத்துவிட்டதால், போலீஸார் அந்த வாகனத்தைத் தள்ளிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்டவர்கள் மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
