கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், உதவி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஜாமின் கோரிய வழக்கு, செப்டம்பர் 28 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அரசு தரப்பின் இறுதி வாதத்திற்காக வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.