உணவு பரிமாறியதில் ஏற்பட்ட தகராறு...சிறையில் அடித்துக்கொண்ட கைதிகள்

x

சென்னை, புழல் சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவருக்கு பல் உடைந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் சிறைக்குள் மதிய உணவு இடைவெளியின் போது, இரு கைதிகளுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. திருட்டு வழக்கில் கைதான ரமேஷ் பஞ்சாட்சரம் என்பவர், தனக்கு உணவு பரிமாறிய போக்சோ வழக்கு கைதியான மூர்த்தி என்பவரிடம், உணவின் அளவை குறைத்து பரிமாறியதற்காக தகராறு செய்து அவரை தாக்கியிருக்கிறார். இதில், மூர்த்தியின் பற்கள் உடைக்கப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இது குறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்