Pregnancy | தாய் கொடுத்ததை நம்பி வாங்கிய 20 வயது மகள் - கடைசியில் கர்ப்பமானதால் பேரதிர்ச்சி

தாய் கொடுத்ததை நம்பி வாங்கிய 20 வயது மகள் - கடைசியில் கர்ப்பமானதால் பேரதிர்ச்சி

தாயின் கள்ளக்காதலனால் இளம்பெண் கர்ப்பம் சென்னை கன்னிகாபுரத்தில் 20 வயது இளம்பெண்ணை தாயின் கள்ளக்காதலன், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை சரியில்லாத இளம்பெண் தாய் கொடுத்த மாத்திரைகளை உட்கொண்ட பிறகு மயக்க நிலையில் இருந்தபோது, அத்துமீறல் நடந்ததாக கூறப்படுகிறது. பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்த இளம்பெண்ணுக்கு, மருத்துவ பரிசோதனையில் 7 வார கர்ப்பம் உறுதியாகி கருக்கலைப்பும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்த தாயின் கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தி மற்றும் உடந்தையாக இருந்த தாய் செல்வி ஆகியோர் தலைமறைவான நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com