Tenkasi || சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் - கைது செய்த போலீஸ்

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் - கைது செய்த போலீஸ்

Tenkasi || சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் - கைது செய்த போலீஸ்

#workers #protest #Sankarankovil #Police #arrest #thanthitv

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் - கைது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டதை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 22 சாயப்பட்டறை ஆலைகளுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்திற்கு அனுமதி கோரியிருந்தனர். ஆனால், காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்து, அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். இந்த சம்பவத்தால் சங்கரன்கோவில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

X

Thanthi TV
www.thanthitv.com