மழை பெய்ய வேண்டியும், வெப்பத்தின் தாக்கம் குறைய வேண்டியும், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வெப்பத்திலிருந்து பொதுமக்களை காக்க வேண்டி நடத்தப்பட்ட இந்த சிறப்பு வழிபாட்டில், 1008 இளநீரைக் கொண்டு மணக்குள விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.