Pondicherry | CCTV | Rowdy | யார் பெரிய ரவுடி? என மோதல் - சிசிடிவியில் சிக்கிய பயங்கர காட்சி
புதுச்சேரியில் யார் பெரிய ரவுடி? - மோதலின் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி புதுச்சேரியில் பிரபல ரவுடி ஒருவரை மண்வெட்டி, சுத்தி மற்றும் மரக்கட்டையால் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. உருளையன்பேட்டையைச் சேர்ந்த அருண் மரியநாதன் மீது, முன்விரோதம் காரணமாக கடந்த 14-ஆம் தேதி மூவர் அவரது வீட்டிற்குச் சென்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த அருண் மரியநாதன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த உருளையன்பேட்டை போலீசார், தலைமறைவாக இருந்த மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
