பொள்ளாச்சி வழக்கு விசாரணை அறிக்கையை வெளியிட சிபிஐ மறுப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை அறிக்கையை, வெளியிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி வழக்கு விசாரணை அறிக்கையை வெளியிட சிபிஐ மறுப்பு
Published on

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ், சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணை அறிக்கையை, வெளியிட முடியாது என்று சிபிஐ திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை, கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் சிறையிலிருந்து வெளிவர முடியாது என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விசாரணையை டிசம்பர் 3க்கு ஒத்திவைத்தது.

X

Thanthi TV
www.thanthitv.com