சொல்ல சொல்ல கேட்காமல் சென்று வாங்கி கட்டி கொண்ட இளைஞர்.. கொஞ்சம் விட்ருந்தா உயிரே போயிருக்கும்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தண்டரை அணைக்கட்டில் எச்சரிக்கை மீறி குளிக்கச் சென்ற இளைஞர் முபாரக் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை அவரது நண்பர்கள் மீட்டனர்.

மணல் திட்டில் தஞ்சமடைந்தவர்கள் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் ஆறு நபர்களையும் கயிறு மூலம் மீட்டு ஏணியில் ஏற்றி கரை சேர்த்தனர். இதனால் தண்டரை அணைக்கட்டு பகுதியில் பரபரப்பு நிலவியது.

X

Thanthi TV
www.thanthitv.com