நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் நடந்த வேல்வாங்கும் நிகழ்ச்சியின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சாமிநாதன் மாரடைப்பால் உயிரிழந்தார். அசைவின்றி இருந்த சாமிநாதனை சக காவலர்கள் நாகை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாமிநாதன் ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த சாமிநாதன் குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.