சென்னை உயர்நீதிமன்ற காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசியதாக வழக்கறிஞர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் லிங்கேஸ்வரன் என்பவர், உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற போது, காவல் ஆய்வாளர் காஜா மொய்தீன், அடையாள அட்டை கேட்டுள்ளார். ஆனால் அதனை தர மறுத்து, காவலர்களை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து. காவல் நிலைய ஆய்வாளர் புகாரின் பேரில், 3 பிரிவுகளில் வழகறிஞர் லிங்கேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.