Cuddalore | பைக் மீது அதிவேகமாக மோதிய கார் - ஸ்பாட்டிலேயே +2 மாணவர் மரணம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் பிளஸ் டூ மாணவர் உயிரிழந்தார். செட்டிப்பட்டறை பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில், எதிரே வந்த கார் அவர்கள் மீது வேகமாக மோதியது. இதில் 18 வயதான தர்ஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற இருவர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
